“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்

“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்

ஆடிட்டர் குருமூர்த்தி பெண்கள் குறித்து பேசியுள்ள கருத்துக்களை திரும்பப் பெறுவதோடு, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளா‌ர்.

சென்னை மயிலாப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, இந்திய பெண்களில் ‌30 சதவிகிதம் பேர்தான் பெண்மையுடன் இருப்பதாகக் கூறினார். அவரது சர்ச்சையான இந்தக் கருத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்கள் குறி‌த்த தனது கருத்துக்களுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தினார். பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவற்றைச் சார்ந்தவர்கள், பெண்களை இழிவுபடுத்தி‌ வருவது தமிழ் சமூகத்துக்கு எதிரானது என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com