விருந்து வைத்து பசுமாட்டுக்கு வளைகாப்பு

விருந்து வைத்து பசுமாட்டுக்கு வளைகாப்பு
விருந்து வைத்து பசுமாட்டுக்கு வளைகாப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே நாட்டு பசுமாட்டிற்கு அதன் உரிமையாளர் வளைகாப்பு நடத்தியது, அந்தப் பகுதியினர் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் தீணம்பாள‌யத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிஷோர் குமார். இவர், நாட்டு மாடுகளையும் வளர்த்து வருகிறார். அதில் ஒன்பது மாதம் சினையாக உள்ள ஒரு பசுவுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு செய்வது போல் கிஷோர் குமார் வளைகாப்பு சடங்குகள் செய்தார். அதற்காக உறவினர்கள், நண்பர்கள், நாட்டுமாடு ஆர்வலர்கள் என 50க்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 
11 வகையான உணவுகளை கொண்டு விருந்து அளிக்கப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள நாட்டு மாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக கிஷோர் குமார் தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com