கோவை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை!

கோவை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை!

கோவை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை!

கோவையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது

கோவை கரும்புகடை பகுதியை சேர்ந்த 31 வயது கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கடந்த 3-ஆம் தேதி ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான
பரிசோதனைக்காக வந்தாலும், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்ததால் கர்ப்பிணிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்
கர்ப்பிணிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், குழந்தைக்கு நாளை கொரோனா பரிசோதனை
செய்யப்படும் என்றும் மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com