மணப்பாறை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா; தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்

மணப்பாறை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா; தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்
மணப்பாறை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா; தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்

மணப்பாறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கிராமமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சி கள்ளிப்பட்டியை சேர்ந்த 75 வயது மூதாட்டி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன், மூதாட்டியை பார்க்க வந்த உறவினரான திருச்சியை சேர்ந்த செவிலியர் மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கள்ளிப்பட்டியில் அவரை சார்ந்த குடும்பத்தினருக்கு பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டது. இதில் மூதாட்டி, 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பெண்கள் மற்றும் 56 வயது முதியவர் உள்ளிட்ட இரு ஆண்கள் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து அவர்கள் வீடு தனிமைப்படுத்தப்பட்டு 6 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வருவாய் வட்டாட்சியர் தமிழ்கனி, காவல் துணை கண்காணிப்பாளர் சு.குத்தாலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு அண்ணாதுரை, ரேவதி உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com