Arrested
Arrestedpt desk

கோவை: தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை - 15 நாட்களில் 118 பேர் கைது

கோவை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் , தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த 118 நபர்களை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் இருந்து 2 கோடியே 24 லட்சத்து 170 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: பிரவீண்

கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 22.12.2024 முதல் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் மீது 80 வழக்குகளும், ஆன்லைனில் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர்கள் மீது 30 வழக்குகள் என மொத்தம் 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Lottery
Lotterypt desk
Arrested
டங்ஸ்டன் சுரங்கம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி.. தடுப்புகளை தூக்கிவீசி மக்கள் ஆர்ப்பாட்டம்!

இதையடுத்து 118 நபர்களை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடமிருந்து 4 இரண்டு சக்கர வாகனம், 11 செல்போன்கள் மற்றும் ரூ.2 கோடியே 24 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com