நண்பர்களை நம்பி சென்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : போக்சோவில் 4 பேர் கைது 

நண்பர்களை நம்பி சென்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : போக்சோவில் 4 பேர் கைது 
நண்பர்களை நம்பி சென்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : போக்சோவில் 4 பேர் கைது 

கோவை சீரநாயக்கன்பாளையத்தில் 11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி கோவை சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ஐஸ்வர்யா நகர் என்ற பூங்காவிற்கு சக நண்பர்களுடன் 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால் மணிகண்டன் என்பவர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். தொடர்ந்து அவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 

மேலும், மற்றொரு நபர் இச்சம்பவத்தை வீடியோ எடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இச்சம்பவத்திற்கு ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன் மற்றும் நாராயண மூர்த்தி ஆகிய 4 பேர் உடந்தையாக இருந்துள்ளனர்.

அந்த 4 பேரை முதல்கட்டமாக போக்சோவில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com