புயல் நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - நீதிபதிகள்

புயல் நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - நீதிபதிகள்
புயல் நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - நீதிபதிகள்

‘கஜா’ புயல் நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ‘கஜா’ புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இதையடுத்து வழக்கறிஞர் ரஜினிகாந்த் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ‘கஜா’ புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் ‘கஜா’ புயல் பாதித்த இடங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் அரசு மேற்கொள்ளும் நிவாரணப்பணிகளை நீதிமன்றம் கவனிக்கும் எனவும் நிவாரணப்பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என கண்காணித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

மீட்பு பணிகள் முழுமையாக நடைபெறும் என நம்புவதாகவும் ஒரே நாளில் அனைத்து நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளபடும் என எதிர்பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டனர். 

‘கஜா’ புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக ரூ1000 கோடி முதல்வர் ஒதுக்கி இருப்பதாக வெளியான செய்தியை படித்தோம் என கூறி வழக்கை நவம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com