செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை File Image
தமிழ்நாடு
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி - நீதிமன்றம் உத்தரவு
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன்னை அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு, சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அத்துடன் புதிதாக அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களும் நீதிபதி அல்லி முன்பு விசாரிக்கப்பட்டன.
Madras high courtpt desk
அப்போது அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, காலதாமதத்தை ஏற்படுத்தவே செந்தில் பாலாஜி தரப்பு கூடுதல் மனுக்களை தாக்கல் செய்வதாக வாதாடினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஜூலை 22 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார்.