கொற்றலை ஆற்றில் கட்டுமானப் பொருட்களை அகற்ற உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்

கொற்றலை ஆற்றில் கட்டுமானப் பொருட்களை அகற்ற உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்
கொற்றலை ஆற்றில் கட்டுமானப் பொருட்களை அகற்ற உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்

எண்ணூர் அனல்மின் நிலைய பணிக்காக கொற்றலை ஆற்றில் கொட்டப்பட்ட கட்டுமானப் பொருட்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்ல கன்வேயர் அமைக்கும்போது விதிமீறியதாகவும், அனுமதித்த பாதையிலிருந்து விலகி கட்டுமான பொருட்கள் கொட்டப்படுவதாகவும் காட்டுக்குப்பம் மீனவர் செல்வராஜ் துரைசாமி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்ல கன்வேயர் அமைக்கும் பணியின் போது கொற்றலை ஆற்றில் நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், நீர் வழிப்பாதையில் தடை ஏற்படுத்தும் கட்டுமானப் பொருட்களை அப்புறப்படுத்தியது குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டதுடன், அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி, சுற்றுச்சூழல் அனுமதியும் மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி என்ற மீனவர் தாக்கல் செய்த வழக்கை நவம்பர் 12க்கு தள்ளிவைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com