கரூரைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம், திருவாசகம் போன்றவை வாசித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள உயர் நீதிமன்ற கிளை, உலகிலுள்ள மொழிகளிலேயே தமிழ்மொழி தான் தொன்மையான மொழி என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்தனர்.