முதுகுளத்தூர்: நாயை இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்ற ஊழியர் தற்காலிக பணியிடை நீக்கம்

முதுகுளத்தூர்: நாயை இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்ற ஊழியர் தற்காலிக பணியிடை நீக்கம்
முதுகுளத்தூர்: நாயை இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்ற ஊழியர் தற்காலிக பணியிடை நீக்கம்

முதுகுளத்தூரில் நாயை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற பேரூராட்சி ஊழியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள வளர்ப்பு நாய் சில பேரை கடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வளர்ப்பு நாயின் உரிமையாளர் பாரதிதாஸ் நாயை அடித்துக் கொள்ளுமாறு பேருராட்சி ஊழியர் முருகேசனிடம் கூறியுள்ளார். இதையடுத்து முருகேசன் தனது மேலதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையாக நாயை இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதையடுத்து நாயை அடித்துக்கொன்றதாக முருகேசனை முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, முருகேசனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துநடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும் கீழ முதுகுளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அன்புசெல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில் பேருராட்சி ஊழியர் முருகேசன் மற்றும் நாயின் உரிமையாளர் பாரதிதாஸ் ஆகியோர் மீது முதுகுளத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com