வார இறுதி நாட்களில் சென்னை காசிமேடு, நொச்சிக்குப்பம் போன்ற மீன் சந்தைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், மீன் வளத்துறை அதிகாரிகள், மீனவ சங்க பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.