சென்னையில் கொரோனா தீவிரத்தை பொறுத்து கட்டுப்பாடுகள்: மாநகராட்சி ஆணையர்

சென்னையில் கொரோனா தீவிரத்தை பொறுத்து கட்டுப்பாடுகள்: மாநகராட்சி ஆணையர்
சென்னையில் கொரோனா தீவிரத்தை பொறுத்து கட்டுப்பாடுகள்: மாநகராட்சி ஆணையர்
சென்னையில் கொரோனாவின் தீவிரத்தை பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்களில் சென்னை காசிமேடு, நொச்சிக்குப்பம் போன்ற மீன் சந்தைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், மீன் வளத்துறை அதிகாரிகள், மீனவ சங்க பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது சந்தைகளில் கூட்டத்தை முறைப்படுத்துதல், நேரக் கட்டுப்பாடுகள் விதித்தல், சந்தைகளை ஒழுங்குபடுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் கொரோனா தீவிரத்தை பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com