தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – விஜயபாஸ்கர் தகவல்
Published on

கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாளை 5 மாவட்டங்களில் நடைபெற உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2-ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாளை 5 மாவட்டங்களில் நடைபெற உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ‘’ சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும். 2 மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செவிலியர்கள் உள்பட 21,170 சுகாதாரப் பணியாளர்களுக்கு இதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.     

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com