தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
Published on


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லிருந்து 15 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக கொரோனாவுக்கு தமிழகத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் “ சென்னையில் மேலும் மூன்று நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மூவருமே வெளிநாடு சென்று திரும்பியவர்கள்தான். இருவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்கள். ஒருவர் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பியவர். மூவருக்குமே மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com