தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 62 பேர் உயிரிழப்பு..! இணைநோய் இல்லாத 11 பேர் பலி

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 62 பேர் உயிரிழப்பு..! இணைநோய் இல்லாத 11 பேர் பலி

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 62 பேர் உயிரிழப்பு..! இணைநோய் இல்லாத 11 பேர் பலி
Published on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 2,212 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,749 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 2,167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 44 பேரும், தனியார் மருத்துவமனையில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்துள்ளவர்களில் 11 பேர் இணை நோய்கள் இல்லாதவர்கள். உயிரிழந்தவர்களில் 50 வயதிற்குட்பட்டவர்கள் 15 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1141 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னையில் மட்டும் இதுவரை 846 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை தவிர்த்து இதர மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு 295 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com