புழல் சிறையில் கொரோனா?: கைதிகளுக்கு பரிசோதனை

புழல் சிறையில் கொரோனா?: கைதிகளுக்கு பரிசோதனை

புழல் சிறையில் கொரோனா?: கைதிகளுக்கு பரிசோதனை
Published on

புழலில் இருந்து பிற சிறைகளுக்கு சென்ற 5 கைதிகளுக்கு கொரோனா உறுதியானதால் புழல் சிறையில் உள்ள கைதிகள், சிறைக்காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் சுமார் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். பிற மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகளை சேர்ந்த தண்டனை கைதிகள் சிலர் புழல் சிறையில் பயிற்சி முடித்து மீண்டும் அவர்களது சிறைக்கு திரும்பியபோது கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் புழல் சிறையில் இருந்து இவர்களுக்கு தொற்று பரவி இருக்குமா, அல்லது இவர்களிடம் இருந்து புழல் கைதிகளுக்கு தொற்று பரவி இருக்குமோ என சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 5 கைதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு முதற்கட்டமாக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 74 கைதிகள், 19 சிறைக்காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com