இதே போல் ஸ்டான்லி மருத்துவமனையின் கொரோனா வார்டில் உள்ள 240 படுக்கைகளும் நிரம்பிவிட்டன. அங்கு இதற்கு மேல் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. எனினும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 600 படுக்கைகளும், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 600 படுக்கைகளும், ராயபுரத்தில் காலியாக உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 500 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இதுவரை ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.