தமிழ்நாடு
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கொரோனா பரவலை தடுப்பது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது. முன்னதாக, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் நடத்தை விதிகளில் சில தளர்வுகளை அளிப்பதன் மூலம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், குடிநீர் வழங்குதல் மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது .