மும்பையில் இருந்து புதுக்கோட்டை வந்த 5 பேருக்கு கொரோனா

மும்பையில் இருந்து புதுக்கோட்டை வந்த 5 பேருக்கு கொரோனா
மும்பையில் இருந்து புதுக்கோட்டை வந்த 5 பேருக்கு கொரோனா

மும்பையிலிருந்து புதுக்கோட்டை வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.  ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி 36 பேர் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்தனர். அதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாலு பேருக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் புதுக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்டு முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com