வாணியம்பாடி: தீயணைப்பு வீரர்கள் 4 பேருக்கு கொரோனா!

வாணியம்பாடி: தீயணைப்பு வீரர்கள் 4 பேருக்கு கொரோனா!
வாணியம்பாடி: தீயணைப்பு வீரர்கள் 4 பேருக்கு கொரோனா!

வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் நான்கு தீயணைப்புப்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தீயணைப்பு நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் தலைமை தீயணைப்பாளர் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது இதில் தொற்று உறுதியானது.

இதைத் தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தில் அவருடன் பணிபுரியும் சக பணியாளர்களுக்கு தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு ஓட்டுனர்கள் ஒரு தீயணைப்பாளர் உட்பட 4 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நான்கு பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள கோவிட் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து தீயணைப்பு நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com