கிண்டி: மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா

கிண்டி: மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா

கிண்டி: மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா
Published on

சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கிண்டியிலுள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 150 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 18 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொற்று கண்டறியப்பட்டுள்ள கிண்டி பயிற்சி மையத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com