கொரோனா: செங்கல்பட்டில் 5 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4911 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5006 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 75. கொரோனா வைரஸ் தொற்றால் முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,589ஆக உள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் நேற்று மட்டும் 2,737 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,094 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 1,939 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்புக்கு 68 பேர் உயிரிழந்துள்ளனர்.