தஞ்சையில் மேலும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தஞ்சையில் மேலும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தஞ்சையில் மேலும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
Published on

தஞ்சையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என மேலும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதனால் தஞ்சையில் தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக மார்ச் 8 ஆம் தேதி அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 58 மாணவிகள் ஒரு ஆசிரியர், 9 பெற்றோருக்கு கொரோனா உறுதியானது. மார்ச் 13-ஆம் தேதி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மார்ச் 18-ஆம் தேதி மேக்ஸ்வெல் மெட்ரிகுலேசன் பள்ளியில் 21 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் தஞ்சை கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியர்கள், 7 மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com