குன்னூர்: சாலையோர சோலைகளில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம் - வனத்துறை எச்சரிக்கை

குன்னூர்: சாலையோர சோலைகளில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம் - வனத்துறை எச்சரிக்கை
குன்னூர்: சாலையோர சோலைகளில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம் - வனத்துறை எச்சரிக்கை

குன்னூர் மேட்டுபாளையம் செல்லும் சாலையோரம் உள்ள சோலைகளில் 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வேண்டுமெ வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள சோலைகளில் 6 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன, இவை குன்னூர் மேட்டுப்பாளையம் சாலைக்கு வந்து விடாமல் வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், யானைகள் எந்த நேரத்திலும் சோலை பகுதியில் இருந்து வெளியேறி சாலைக்கு வரும் சூழல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வேண்டுமென வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினரும் யானைகளையும் வாகன போக்குவரத்தையும் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com