3-வது நாளாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ

3-வது நாளாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ

3-வது நாளாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ
Published on

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே கம்பத்ராயன் கிரி மலையில் 3-வது நாளாக காட்டுத் தீ தொடர்ந்து வருகிறது. வறட்சியின் காரணமாக வனத்தில் பெரும்பாலான பகுதி காய்ந்து சருகாகியுள்ளதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்தது. வேகமாக பரவி வரும் தீயால் மூலிகை மற்றும் விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகி வருகின்றன.

தீ மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு வேட்டைத்தடுப்பு காவலர்கள் சுமார் 50 பேர் வனத்தில் முகாமிட்டுள்ளனர். கர்நாடக தமிழக எல்லையான கேர்மாளம் வனப்பகுதியிலும் தீ பரவியுள்ளது. இந்‌நிலையில், 300 மீட்டருக்கு ஒரு இடத்தில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஆசனூர் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் பத்மா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் கருகிய சோகம் இன்னும் யார் மனதையும் விட்டு நீங்கவில்லை. இந்த வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமே தீ எரிவதாகவும், ஆனால் அதனை அணைக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாலேயே 10 உயிர்கள் பறிபோகியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே மூன்றாவது நாளாக தீ எரிந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com