நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சீருடைப்பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர்செயலர் விடுவிப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சீருடைப்பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர்செயலர் விடுவிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சீருடைப்பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர்செயலர் விடுவிப்பு

நீதிமன்றத்தில் போலி அறிக்கை தாக்கல் செய்ததாக பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து  சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் செந்தாமரைக் கண்ணனை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்,கடந்த 2018 ல் கைவிரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடத்திய எழுத்து தேர்வில், கேள்வி ஒன்றுக்கு மதிப்பெண் வழங்க கோரி அருணாச்சலம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கேள்விக்கான சரியான விடையை கண்டுபிடிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்ட நிலையில், ஐ..டி பேராசிரியர் என்ற பெயரில் மூர்த்தி என்பவர் அளித்த அறிக்கையின்படி, அருணாச்சலத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மூர்த்தி என்ற பேராசிரியரே ஐஐடி யில் இல்லை என மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலி அறிக்கை தாக்கல் செய்த சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளர் செந்தாமரை கண்ணன்  மீது தானாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் ஆர்.ஹேமலதா  அமர்வு, செந்தாமரை கண்ணனோடு நேரடியாக தொடர்பில் இல்லை எனவும், ஆலோசகராக அறியப்பட்ட விஜயகுமார் மற்றும்  கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் மூர்த்தி கூறியதை சுட்டிக்காட்டி, அவரை வழக்கில் இருந்து விடுவித்துள்ளனர்

மேலும், மூர்த்தி மற்றும் விஜயகுமார் மீதான வழக்கையும் ரத்து செய்த நீதிமன்றம், சம்பவத்தின் போது ஊட்டியில் இருந்த விஜயகுமாரை தவறுதலாக கைது செய்து 22 நாட்கள் சிறையில் அடைத்ததற்காக மூன்று மாதத்தில்  தமிழக அரசு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், சீருடை பணியாளர் தேர்வாணையம் செய்த தவறுக்காக 2 ஆயிரம்  ரூபாய் அபராதத்தை உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் 4 வாரங்களில் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com