வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிகள் குறித்து காவல் ஆணையர் ஆலோசனை

வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிகள் குறித்து காவல் ஆணையர் ஆலோசனை
வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிகள் குறித்து காவல் ஆணையர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் எவ்வாறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கினார்.

நகரப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னையில் செய்யப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர்கள் மற்றும் அதற்கு மேலுள்ள காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவலர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்ட வாரியாக பணி ஒதுக்கீடு செய்யும் திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், DARE (Drive Against Rowdy Elements), DAD (Drive Against Drugs), DABToP (Drive Against Banned Tobacco Products) ஆகியவை குறித்த சீராய்வு செய்யப்பட்டது. குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்வது சம்பந்தமாகவும், பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் பிணைக்கு உட்படுத்தப்படும் நபர்கள் மற்றும் பிணையை மீறி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.

காவல் அதிகாரிகள் அனைவரும் அனைத்து வாக்கு மையங்கள், வாக்கு சாவடிகள், குழுவாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்யும் பிரச்சனைக்குரிய இடங்களில் நேரடியாக சென்று கண்காணிக்கும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் குறித்த சமீபத்திய வழிகாட்டுதல்களை உடனடியாக கடைபிடிக்கவும், அமல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com