ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்திலிருந்து இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ ஐ.ஜி அலோக் மிட்டல் இந்த தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐஎஸ் தொடர்பு வழக்கில் நாடு முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.