தென்தமிழகத்தில் அதிக அளவில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது : தினேஷ் குண்டுராவ்

தென்தமிழகத்தில் அதிக அளவில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது : தினேஷ் குண்டுராவ்

தென்தமிழகத்தில் அதிக அளவில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது : தினேஷ் குண்டுராவ்
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கவிருப்பதாகவும், தென்தமிழகத்தில் அதிக அளவில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது என்றும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறிய அவர் “வரும் 24ஆம் தேதி கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, சுர்ஜிவாலா உள்ளிட்ட தலைவர்கள் தமிழகம் வருகிறார்கள். காங்கிரஸ் கமிட்டியில் ஆலோசனை முடித்த பிறகு 25-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு கனிமொழியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும். தொகுதிப் பங்கீடு முடித்தபிறகு ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எத்தனை இடங்கள் போட்டியிடுவது என்பது அப்போது ஆலோசிக்கப்படும். தென்தமிழகத்தில் அதிக அளவில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது “என தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் “பேச்சுவார்த்தை விரைவில் முடிந்துவிடும் என்று நம்புகிறோம். காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் எனும் ஊகத்தை நான் வெளியில் சொல்வது நியாயமல்ல. ஏனெனில், பேசுவதற்கு மூத்த தலைவர்கள் வர உள்ளனர். திமுக தலைவர்களுடன் பேச தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருடன் நானும் செல்லவிருக்கிறேன்“ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com