''பொய் பேசும் காங்கிரஸார்'': கார்த்தி சிதம்பரம் பேச்சு

''பொய் பேசும் காங்கிரஸார்'': கார்த்தி சிதம்பரம் பேச்சு
''பொய் பேசும் காங்கிரஸார்'': கார்த்தி சிதம்பரம் பேச்சு

காங்கிரஸ் கட்சியினர் பொய் பேசுவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், காங்கிரஸ் கட்சியினர் சக நிர்வாகிகளிடம் பொய் சொல்வதை நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், “காங்கிரஸில் 70 லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள் என பொய்யாக அறிக்கை கொடுத்துவிட்டார்கள். இதை நம்பி 2016ஆம் ஆண்டு தேர்தலில் நான் நின்று விட்டேன். ஆனால் உறுப்பினர்களே நமக்கு (காங்கிரஸ்) ஓட்டு போடவில்லை. சராசரியாக ஒவ்வொரு பாராளுமன்றத்திற்கும் 30 ஆயிரம் வாக்குகள் தான் விழுந்தது. இதில் எப்படி 70 லட்சம் உறுப்பினர்கள் இருக்க முடியும். இதற்கு பொய்யாக சந்தா தொகை செலுத்தி பழைய பேப்பர்களை டெல்லிக்கு அனுப்பி விட்டார்கள். நம் நிர்வாகிகள் அங்கு டெல்லியில் இந்த பேப்பரை வைத்து பட்டாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். ஆகையால் காங்கிரஸ் என்பது பெரிய பொய். முதல் ஸ்டெப் என்னவென்றால் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்” என நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com