மதுரை: செல்போன் கோபுரத்தை 2 நாட்களாக காணவில்லை என புகார்

மதுரை: செல்போன் கோபுரத்தை 2 நாட்களாக காணவில்லை என புகார்
மதுரை: செல்போன் கோபுரத்தை 2 நாட்களாக காணவில்லை என புகார்

மதுரையில் செல்போன் கோபுரத்தை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கூடல்புதூரில் அமராவதி தெருவில் அமைக்கப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் செல்போன் கோபுரம் இரு தினங்களுக்கு காணாமல் போனதாக அந்நிறுவனத்தின் மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், செல்போன் கோபுரம் திருடு போனது உறுதியாகியுள்ளது.

செல்போன் கோபுரம் அமைத்து கொடுக்கும் ஒப்பந்ததாரர், இடத்தின் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒப்பந்ததாரர்களிடையே ஏற்பட்ட பிரச்னையில் செல்போன் கோபுரம் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com