கடவுளை அவமதித்ததாக புகார்: பாரதிராஜா மீது வழக்குப்பதிவு

கடவுளை அவமதித்ததாக புகார்: பாரதிராஜா மீது வழக்குப்பதிவு

கடவுளை அவமதித்ததாக புகார்: பாரதிராஜா மீது வழக்குப்பதிவு
Published on

இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அளிக்‌கப்பட்ட புகாரில்‌ இயக்குநர் பாரதிராஜா‌ மீது ‌‌வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் கடந்‌த ஜனவரி 18ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, இந்து கடவுள் விநாயகர் குறித்து அவதூறாகப் பேசியதாக‌ காவல்நிலையத்தில்‌ புகார் அளிக்கப்பட்டது. ‌இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் அளித்த புகாரில், நீதிமன்ற உத்தவுபடி பாரதிராஜா‌ மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை என்ற அமைப்பை தொடங்கி காவிரி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக  பாரதிராஜா போராடி வரும் நிலையில், அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com