அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இடையேயான போட்டி – தேர்வுக்கு முன்பே வெளியாக கேள்வித்தாள்!

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இடையேயான போட்டி – தேர்வுக்கு முன்பே வெளியாக கேள்வித்தாள்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இடையேயான போட்டி – தேர்வுக்கு முன்பே வெளியாக கேள்வித்தாள்!

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குரிய அறிவியல் வினாத்தாள் லீக் ஆனது. ஆசிரியர்களுக்கு இடையே உள்ள போட்டியில் மற்றொரு ஆசிரியரே கேள்வித் தாளை லீக் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் பாடத் தேர்வு நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், நாளை தேர்வு நேரத்தில் வழங்க வேண்டிய அந்த வினாத்தாளை இன்றே மாணவர்களிடம் கொடுத்து அதை பார்த்து படித்து விட்டு நாளை தேர்வுக்கு வரும்படி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் கேட்டபோது.. அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடையேயான போட்டியில் தலைமை ஆசிரியருக்கு தெரியாமல் மற்றொரு ஆசிரியர் அந்த வினாத்தாளை லீக் செய்தது தெரியவந்துள்ளது.

நாளை நேரடியாக அந்த பள்ளியில் விசாரணை நடத்தி முடிவில் தவறு செய்த ஆசிரியர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com