டெங்கு இழப்பீடு கோரும் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

டெங்கு இழப்பீடு கோரும் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
டெங்கு இழப்பீடு கோரும் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. டெங்குவை பரப்பும் கொசுக்களை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. மேலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய சிகிச்சை அளிப்பதிலும் தமிழக அரசு தவறிவிட்டது. எனவே கொசுக்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பதோடு, டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 24 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com