பொதுச் சின்னம் ஒதுக்கக்கோரி ஐஜேகே தொடர்ந்த வழக்கு: இன்று விசாரணை!

பொதுச் சின்னம் ஒதுக்கக்கோரி ஐஜேகே தொடர்ந்த வழக்கு: இன்று விசாரணை!

பொதுச் சின்னம் ஒதுக்கக்கோரி ஐஜேகே தொடர்ந்த வழக்கு: இன்று விசாரணை!
Published on

பொதுச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

2011 சட்டமன்ற தேர்தலில் மோதிரம் சின்னமும், 2016 சட்டமன்ற தேர்தலில் கத்தரிக்கோல் சின்னமும் ஒதுக்கப்பட்ட நிலையில், வாக்காளர்கள் எளிதாக கண்டு வாக்களிக்க ஏதுவாக இருந்ததாக மனுவில் ரவிபச்சமுத்து குறிப்பிட்டுள்ளார். வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், தமிழகத்தில் 40 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 20 தொகுதிகளிலும் ஐ.ஜே.கே. போட்டியிடுவதாகவும், கடந்த தேர்தல்களைபோல இந்த முறையும் பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அளித்த மனுவில், ஏழு கதிர்கள் கொண்ட பேனா முள் சின்னத்தை தங்களுக்கான பொது சின்னமாக ஒதுக்கக்கோரி மனு கொடுத்துள்ளதாகவும், ஆனால் அந்தச் சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கியிருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்க உள்ளநிலையில், அதற்குள் பொதுச்சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ஐஜேகே தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஐ.ஜே.கே.-வின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com