பல்கலைக்கழக மாணவி மீது மாணவர் ஆசிட் வீச்சு - போலீஸ் தீவிர விசாரணை

பல்கலைக்கழக மாணவி மீது மாணவர் ஆசிட் வீச்சு - போலீஸ் தீவிர விசாரணை
பல்கலைக்கழக மாணவி மீது மாணவர் ஆசிட் வீச்சு - போலீஸ் தீவிர விசாரணை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீசியது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிபிஇஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் முத்தமிழன் (24). இவர், அதே வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஏதோ காரணத்தால் முத்தமிழனின் பழக்கத்தை அந்த மாணவி குறைத்துக்கொண்டதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த முத்தமிழன் மாணவி மீது ஆசிட் வீசியுள்ளார். 

இதில் படுகாயமடைந்த மாணவி அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே முத்தமிழனை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். காயமடைந்த முத்தமிழனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தகவலறிந்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com