காதலிக்க வற்புறுத்தியதால் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி..!

காதலிக்க வற்புறுத்தியதால் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி..!

காதலிக்க வற்புறுத்தியதால் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி..!
Published on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காதலிக்க கட்டாயப்படுத்தியதால் 3-ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றார்.

புதுக்குடியேற்று மணப்பாட்டைச் சேர்ந்த மாணவி கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பிசிஏ பயின்று வருகிறார். அதே பாடப்பிரிவில் 2-ஆம் ஆண்டு பயிலும் இடைச்சிவிளையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், தன்னை காதலிக்குமாறு மாணவியை கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாண‌வியை ரவிக்குமார் வற்புறுத்தி, தகாத வார்த்தைகளால் மிரட்டியுள்ளார்.

இதனால், நேற்று மாலை கல்லூரியின் 3ஆவது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த மாணவிக்கு தூத்துக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தட்டார்மடம் காவல்துறையினர் ரவிக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com