அவிநாசி அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை
அவிநாசி அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை

அவிநாசி அருகே காசிகவுண்டன்புதூரில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த உறவினரான சக மாணவன் தப்பியோடிய நிலையில் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் அரசகுளம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் அகஸ்டியன் (20). அவிநாசியை அடுத்த நீலிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு கணிதம் படித்து வருகிறார். இவரது உறவினரான ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியை சேர்ந்த ஜேசுராசு (50) மற்றும் அவரது மகன் பிரான்சிஸ் வல்லரசு (20) ஆகிய மூவரும் அவிநாசியை அடுத்துள்ள காசிகவுண்டன்புதூரில் தங்கியுள்ளனர். பிரான்சிஸ் வல்லரசு பி.காம் (சிஏ) இரண்டாம் ஆண்டும் படித்து வருகிறார். ஜேசுராசு சமையல் வேலைக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ஜேசுராசு வேலையிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டிற்குள் அகஸ்டியன் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டர். முதற்கட்ட விசாரணையில், அகஸ்டியனை பிரான்சிஸ் வல்லரசு கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

தப்பியோடிய பிரான்சிஸ் வல்லரசை பிடிக்க அவரது சொந்த ஊரான தொண்டிக்கு போலீசார் விரைந்துள்ளனர். அத்துடன் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும், கொலையாளியின் செல்போன் சிக்னல் மூலமாகவும் தேடுதல் பணியை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com