சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - மாவட்ட ஆட்சியர் 

சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - மாவட்ட ஆட்சியர் 
சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - மாவட்ட ஆட்சியர் 

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் வழக்கம்போல் பள்ளிகள் இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது

இதனிடையே சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அண்ணா நகர், வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம், விருகம்பாக்கம், போரூர், செம்பரம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதேபோல் சென்னையை அடுத்துள்ள மாதவரம், புழல், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் நேற்று 21 செ.மீ மழை பெய்துள்ளது. 

இந்நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட்டத்திலும் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com