கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியகுளம் அருகே கட்டப்பட்டு வந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை மேம்படுத்தும் பணிகள், தெருக்களில் எல்.இ.டி பல்புகள் பொருத்தும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெரியகுளமும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குளக்கரை அருகே ஆசாத் நகரை ஒட்டி 12 அடியில் ஒரு தடுப்புச்சுவர் கட்டப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு கோவையில் கனமழை பெய்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் அந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் சுற்றுச்சுவர் அருகே யாரும் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com