இந்நிலையில் நேற்று அந்நிகழ்விற்காக குறித்த நேரத்தில் பி.ஆர்.நடராஜன் சென்றும், நிகழ்ச்சியின் நிறுவன அதிகாரிகள் யாரும் வரவில்லை. இந்த நிகழ்ச்சிக்காக எம்.பி.யை தவிர்த்து, மாநில அரசு சார்பில் கலால் துறை தாசில்தாரும் சென்றார். இருவரும், சுமார் ஒருமணி நேரம் காத்திருந்தும் 3 நிறுவனங்களின் சார்பில் யாரும் வராததால் இந்நிகழ்ச்சி கண்துடைப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரை அவமதிப்பதாகவும் கூறி பி.ஆர்.நடராஜன் அங்கிருந்த சில ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியை வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் காலதாமதமாக இன்று நடைபெற்றால் அதற்கான மன்னிப்பு கடிதத்தை வழங்க வேண்டும் என்றும் அங்கு இருந்தவர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இந்த ஏலத்தில் முறைகேடு நடைபெறுவதாக சந்தேகம் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக கூறும் எம்.பி., நடராஜன், தேவைப்பட்டால் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரிடம் நேரடியாக புகார் தெரிவிப்பேன் என்றார்.