'எனக்கு அம்மா அப்பா இல்ல' ரயில் நிலைய கழிவறையில் இருந்து சிறுமி மீட்பு

'எனக்கு அம்மா அப்பா இல்ல' ரயில் நிலைய கழிவறையில் இருந்து சிறுமி மீட்பு
'எனக்கு அம்மா அப்பா இல்ல' ரயில் நிலைய கழிவறையில் இருந்து சிறுமி மீட்பு

கோவை ரயில் நிலைய கழிவறையில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை மீட்ட ரயில்வே காவல் துறையினர் அவரை குழந்தைகள் பாதுகாப்பு நல சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை ரயில் நிலைய கழிவறையில், 17 வயது சிறுமி ஒருவர் தங்கி இருப்பதை ரயில்வே காவல்துறையினர் நேற்று கண்டனர். அவரிடம் விசாரித்தபோது, ஆந்திராவில் இருந்து வேலை தேடி வந்ததாகவும், கோவை ரயில் நிலையம் வந்ததும், தன்னை அழைத்து வந்த நபர், தனியாக விட்டுச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

தனக்கு பெற்றோர் யாரும் இல்லை என்றும், இரண்டு நாட்களாக உணவு ஏதும் உண்ணவில்லை எனவும் அந்த சிறுமி தெரிவித்தது காண்போரை கண்கலங்க வைத்தது. இதையடுத்து சிறுமியை பற்றிய விவரம், சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த சைல்டு லைன் ஊழியர்கள் சிறுமியை மீட்டு, கோவை உக்கடம் டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com