4ம் ஆண்டு மருத்துவ மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை -கோவையில் அதிர்ச்சி சம்பவம்

4ம் ஆண்டு மருத்துவ மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை -கோவையில் அதிர்ச்சி சம்பவம்
4ம் ஆண்டு மருத்துவ மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை -கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த மாணவி தனது கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்வர்தன், இவரது மகள் நந்தினி(22). இவர் கோவை அவிநாசி சாலை பீளமேட்டில் உள்ள தனியார் (பி.எஸ்.ஜி) மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., பயின்று வந்தார்.



கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வந்த நந்தினி, காலை வெகு நேரமாகியும் கதவை திறக்காததாலும், கல்லூரி வகுப்புக்கு நேரமாவதாலும் அருகில் மற்றொரு அறையில் உள்ள மாணவி கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் எந்தவித சத்தமும் இல்லாததால், விடுதி காப்பாளரிடம் இந்த தகவல் சொல்லப்பட்டது. உடனே வந்த விடுதி காப்பாளரும் நந்தினி அறையை தட்டி வெகு நேரமாகியும் திறக்காததால், அறையின் ஜன்னலை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, உள்ளே தூக்கிட்ட நிலையில் நந்தினி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறுவைசிகிச்சை செய்யும் கத்தியை பயன்படுத்தி மணிகட்டு நரம்புகளை அறுத்த பின்னர் துப்பாட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி அறை என்பதால், நந்தினி தான் தனியாக தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.



மாணவியின் மரணம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் மாணவியின் பெற்றோர்கள் கோவை வருகின்றனர். அவர்கள் வந்த பிறகு மாணவியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். தற்கொலைக்கான கடிதம் எதுவும் கிடைக்காத நிலையில், சம்பவம்  குறித்து பீளமேடு  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com