முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சென்னை விமானநிலையத்தில் விற்கப்படும் டீ விலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “ நான் சென்னை விமானநிலையத்தில் உள்ள காபி டேவில் ஒரு டீ கேட்டேன்.அவர்கள் சூடுநீரையும் டீபேக்கையும் கொடுத்து விலை ரூ.135 என்றார். நான் வேண்டாம் என மறுத்துவிட்டேன். நான் செய்தது சரியா? தவறா?. காபி விலை ரூ180. இதை யார் வாங்கி குடிப்பார்கள்? என்றேன். அதற்கு, பலர் வாங்கி குடிக்கிறார்கள் என்றனர். நான் காலாவதியானவனா ? என பதிவிட்டுள்ளார்.அவரது பதிவுக்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.