நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடியில் தொடர்ந்து 3வது நாளாக மின் உற்பத்தி நிறுத்தம்

நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடியில் தொடர்ந்து 3வது நாளாக மின் உற்பத்தி நிறுத்தம்
நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடியில் தொடர்ந்து 3வது நாளாக மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொடர்து முன்றாவது நாளாக 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நாள்தோறும் 5 பிரிவுகளிலும் மின்னுற்பத்தி முழு அளவில் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும்.

இந்நிலையில், கோடைகால மின்சார தேவைக்காக ஐந்து பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், நிலக்கரியின் கையிருப்பு தட்டுப்பாட்டால் 5 பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்வது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தடைபட்டுள்ளது.

இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 5 பிரிவுகளிலும் முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், அனல் மின் நிலையத்தில் நான்கு அல்லது மூன்று பிரிவுகள் அவ்வப்போது இயக்கப்பட்ட நிலையில், தற்போது நிலக்கரி இருந்தும் கடந்த 5 நாட்களாக 4 பிரிவுகள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

3வது பிரிவுகளில் மட்டுமே 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1, 2, 3, 4, 5 ஆகிய பிரிவுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனல் மின் நிலையத்தின் தலைமைபொறியாளார், கிருஷ்ணகுமாரிடம் கேட்டபோது, அனல் மின் நிலையத்தில் தற்போது 1லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி போதுமான அளவு கிடைக்கிறது. சென்னை மின் பகிர்மான தலைமை அலுவலகத்தில் இருந்த வந்த தகவலின் பேரில் 5 பிரிவுகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 5 பிரிவுகளும் இயக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com