நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: தூத்துக்குடியில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: தூத்துக்குடியில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: தூத்துக்குடியில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நாள்தோறும் 5 பிரிவுகளிலும் முழு அளவில் மின்னுற்பத்தி செய்ய வேண்டுமென்றால் 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும்.

கோடைக்கால மின்சார தேவைக்காக ஐந்து பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், நிலக்கரியின் கையிருப்பு தட்டுப்பாட்டால் ஐந்து பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்வது கடந்த ஒரு மாதமாக தடைபட்டுள்ளது.

1-வது யூனிட்டில் மட்டும் தற்போது 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. தற்போது தூத்துக்குடி அனல் மின்நிலைய பொறியாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது நிலக்கரி 50,000 டன் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com