8 வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்: பேரவையில் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்

8 வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்: பேரவையில் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்
8 வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்: பேரவையில் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட பல வழக்குகள் வாபஸ் பெறப்படுவது குறித்து அறிவித்தார். அதில்,

  • கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறும்.
  • மீத்தேன், நியூட்ரினோ.ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து போராடியவர்கள்மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும். அதேபோல் எட்டுவழிச்சாலையை எதிர்த்து போராடியவர்கள்மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
  • வேளாண் சட்டம், குடியுரிமை சட்டம், கூடங்குளம் திட்டங்களுக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
  • வடமாவட்ட தொழில் வளர்ச்சியை பெருக்கிட செய்யாறு, திண்டிவனத்தில் 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும். 22000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் 2 தொழிற்சாலைகள் நிறுவப்படும்.
  • தமிழகத்தில் உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும்; புதிதாக சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
  • தமிழகத்திலுள்ள திருக்கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சைபெற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com