”ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்கப்போகிறது” - முப்பெரும் விழாவில் முதலமைச்சர் பேச்சு

”ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்கப்போகிறது” - முப்பெரும் விழாவில் முதலமைச்சர் பேச்சு
”ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்கப்போகிறது” - முப்பெரும் விழாவில் முதலமைச்சர் பேச்சு

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சி தான் என்ற நிலையை தொண்டர்கள் உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என மூன்றையும் கொண்டாடும் விதமாக திமுக சார்பில் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சிக்காக பணியாற்றியவர்களுக்கான விருதுகள் வழங்கி கவுரவித்தார். பின்னர் உரையாற்றிய அவர், தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலும் இனி விடியல் பிறக்கப்போகிறது எனக் கூறினார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக 100 சதவிகிதம் வெற்றியை பெறவேண்டும் எனவும் தொண்டர்களிடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com