"மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணிபுரிபவர்கள்" -முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

"மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணிபுரிபவர்கள்" -முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து
"மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணிபுரிபவர்கள்" -முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

"மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணிபுரிபவர்கள் ஆசிரியர்கள்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஆசிரியப்பணி என்பது ஏட்டுக்கல்வியை மட்டும் புகட்டுவது அன்று என்றும், அது மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்களை கல்வியறிவால் செம்மைப்படுத்தி அறிவுள்ள செய்திகளை புகுத்தி, அவர்களை உயர்ந்தவர்களாக உயர்த்துகிறார் ஆசிரியர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மாணவர்களை அறிநெறிகளில் இருந்து பிறழாது வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளத்தக்கவர்களாய் உருவாக்க தன்முனைப்போடு செயல்பட ஆசிரியர்களை கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com