'குடும்பத் தலைவிகள் பெயரில்தான் நகர்ப்புற மேம்பாட்டு வீடு'  - முதல்வர் மு.க.ஸ்டாலின்

'குடும்பத் தலைவிகள் பெயரில்தான் நகர்ப்புற மேம்பாட்டு வீடு' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

'குடும்பத் தலைவிகள் பெயரில்தான் நகர்ப்புற மேம்பாட்டு வீடு' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக சார்பில் நடைபெறும் மகளிர் தினவிழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது திமுக மகளிரணியின் இணையதளத்தை தொடங்கிவைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ’’உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஆண்களைவிட பெண்களே அதிகமானோர் கல்விபயில்கின்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை திமுக கொண்டுவந்தது.

அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40%ஆக உயர்த்தியுள்ளோம். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும்’’ என்று கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com